உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் சுற்றுசுவர் சீரமைக்க கோரிக்கை

செங்கை அரசு மருத்துவக்கல்லுாரியில் சுற்றுசுவர் சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு நலன்கருதி, சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 1965ம் ஆண்டு, துவக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக 480 ஏக்கர் நிலம் உள்ளன. இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் தங்கும் விடுதியில், மருத்துவ மாணவர்கள் 400 பேரும், முதுநிலை மாணவர்கள் 350 பேர் என, மொத்தம் 750 மாணவர்கள் தங்கி படித்தவருகின்றனர்.இதே வளாகத்தில், செவிலியர் கல்லுாரி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு, சுற்றுசுவர் அமைத்தனர்.சுற்றுவரை, ஆங்காங்கே, சமூக விரோத கும்பல் உடைத்து, மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவக்கல்லுாரி சுற்றி, புதிய சுற்றுசுவர் அமைக்க, மருத்துவக்கல்லுாரி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்து உள்ளது.மாணவர்கள் நலன்கருதி, விரைவில் புதிய சுற்றுசுவர் அமைக்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !