ரேஷன் கார்டு திருத்தம் 10ம் தேதி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தங்கள் செய்ய, வரும் 10ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஆறு தாலுகாக்களில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது. கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும் 10ம் தேதி, சனிக்கிழமை நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
தாலுகா கிராமம்செங்கல்பட்டு ராஜகுளிப்பேட்டைமதுராந்தகம் செனையனேரிசெய்யூர் சேம்புலிபுரம்திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் (அணுபுரம்)திருப்போரூர் நெம்மேலிவண்டலுார் ஊனமாஞ்சேரி