உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், திருநங்கையருக்கு அரசு உதவிகள் பெற அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், வரும் 24ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கையருக்கு, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க, ரேஷன் கார்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன.மாவட்ட அளவில், ஒரே இடத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிவற்றை வழங்கும் அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.அதன்படி இதற்கான சிறப்பு முகாம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதை, திருநங்கையர் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை