உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்களால் அவதி

நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்களால் அவதி

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணியரின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்பட்டது.மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மழை மற்றும் வெயில் காலங்களில் இருந்து பயணியரை பாதுகாக்கும் வகையில்,தற்காலிக பயன்பாட்டிற்காக, நிழற்குடை அமைக்கப்பட்டது.அதில், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் இருசக்கர வாகனங்களை நிழற்குடை பகுதியில் ஆக்கிரமித்து நிறுத்தி விட்டு செல்கின்றனர்.இதனால், நிழற்குடை பகுதியில் இடவசதி இன்றி உள்ளதால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ