தாசில்தார் பொறுப்பேற்பு
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு வட்டாட்சியர்களை மாற்றி, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதன்படி செய்யூரில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் சரவணன், திருப்போரூருக்கு மாற்றப்பட்டார்.இதையடுத்து, மதுராந்தகத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் கணேசன், செய்யூர் வட்டாட்சியராக பொறுப்பேற்றார். அவருக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.