உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசிநாள்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், 4 லட்சத்து 36,061 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். செங்கல்பட்டு அடுத்த, வல்லம் ஊராட்சி, நேருநகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 9ம் தேதி துவக்கிவைத்தார். அதன்பின், மாவட்டத்தில், ஆறு தாலுகாவில். நேற்று முன்தினம் வரை, 3 லட்சத்து 58,962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர். பொங்கல் தொகுப்பு 77,099 பேர் வாங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட வழங்கல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி