உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பராமரிப்பற்ற வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

பராமரிப்பற்ற வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

மறைமலை நகர்:வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில், பயணியருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் தடத்தில், வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது.திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக, சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், இந்த ரயில் நிலையத்தில் தினமும் நின்று செல்லும். இந்த ரயில் நிலையத்தை வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், கூரையின்றியும் உள்ளதால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:தினமும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தாம்பரம், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் பயணியர் சென்று வருகின்றனர். ஆனால் இந்த ரயில் நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை.கூரைகள் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில், பயணியர் அவதிப்படுகின்றனர். ரயில்வே நடைபாதை முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.பல இடங்களில் நடைபாதைகள் உடைந்து காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சத்துடனேயே பயணியர் ரயிலுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது. ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை