தேவனேரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி, தேவனேரியில், பல ஆண்டுகளுக்கு முன், குடிநீர் உவர்ப்பாக இருந்தது. இருப்பினும், வேறு வழியின்றி இப்பகுதியினர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.எனவே, இப்பகுதியினருக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டிய அவசியம் கருதி, சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.பேரூராட்சி நிர்வாகம் அதுகுறித்து பரிசீலித்து, தன்னார்வ அமைப்பினர் வாயிலாக, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைத்து, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.