குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சீரமைக்கப்படுமா?
தி ருக்கழுக்குன்றம், மந்தைவெளி தெரு, நால்வர்கோவில் பேட்டையில், இந்திர தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைநீர் செல்வதற்காக, அமைக்கப்பட்ட கால்வாய், கடந்த 15 ஆண்களுக்கும் மேலாக துார்வாரப்படவில்லை. கால்வாயின் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரால் கொசு உற்பத்தி மிகுதியாகி, இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கால்வாயை துார்வாரி சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எல்.கலாவதி, திருக்கழுக்குன்றம்.