உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து வாலிபர் பலி

பாம்பு கடித்து வாலிபர் பலி

சிங்கபெருமாள் கோவில்: பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சமித் டே, 27. இவர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது கட்டு விரியன் பாம்பு சமித் டேவின் வலது காதில் கடித்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா க சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிங்கபெருமாள் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை