உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளேஸ் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி அபாரம்

பிளேஸ் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி அபாரம்

சென்னை, தமிழகத்தில் முதல் முறையாக 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன.இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ, ஏ.ஜே.எஸ்., - கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டிகள், 'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில் நடக்கின்றன. நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடந்த போட்டியில், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் மற்றும் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., பள்ளிகள் மோதின.அதில், 25 - 11, 25 - 18, 25 - 23 என்ற கணக்கில் செயின்ட் பள்ளி அணி வெற்றி பெற்றது.இன்றைய ஆட்டத்தில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மற்றும் ஆலந்துார் ஏ.ஜே.எஸ்., நிதி பள்ளி அணிகள் மோதுகின்றன. போட்டிகள், வரும் 2025 ஜன., வரை மொத்தம் 56 நாட்கள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ