உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கெட்டுப்போன பால் விவகாரம் ஆவின் நிறுவனம் விளக்கம்

கெட்டுப்போன பால் விவகாரம் ஆவின் நிறுவனம் விளக்கம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பால் கெட்டுபோனதாக நமது நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்:காக்களூர் பால் பண்ணையில் இருந்து 27ம்தேதி காலை வினியோகத்திற்கு அனுப்பபட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதி ஏஜன்ட் பச்சையப்பன் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அன்று, 4,000 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள், 11,000 லிட்டர் மற்ற பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.தகவலின்படி, வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளின் மாதிரிகள், ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது.இதில், பால் நல்ல தரத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. புகார்களின் தன்மை குறித்து விசாரிக்கும்போது, ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை காய்ச்சும்போது, பால் பாத்திரத்தில் ஒட்டுவதாக மட்டுமே தெரிவித்தனர்.இவ்வாறு சில ஏஜன்டுகளில் இருந்து மட்டுமே புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளில் எவ்வித புகாரும் இல்லை. புகார் தெரிவித்தத பச்சையப்பன் என்ற நபர், காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனை முகவராக இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ