மெரினாவில் கரை ஒதுங்கிய பெண் உடல்
சென்னை, மெரினா, திருவள்ளுவர் சிலை பின்புறம் கடற்கரையில் நேற்று பகல் 12:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. மெரினா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.