உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ டிரைவரை தாக்கிய நால்வர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய நால்வர் கைது

எம்.கே.பி.நகர், சென்னை, வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர்கள் அசோக்குமார், 35, ஜீவா, 33, பாஸ்கர், 30, சூர்யா, 27. இவர்களது வீடுகளின் மீது மர்ம நபர் பாட்டிலை வீசியுள்ளார். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகனுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், முருகனின் கை, முகத்தில் வெட்டி விட்டு அக்கும்பல் தப்பியது. இதில் காயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்