உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் நகை மாயம்

வீட்டில் நகை மாயம்

அமைந்தரை, அமைந்தகரை, வி.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா, 50; உயர் நீதிமன்ற ஊழியர். இவர், நேற்று அமைந்தகரை போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'இரு தினங்களுக்கு முன், தன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சோதித்தேன். அப்போது, 2 சவரன் நகைகள், 20,000 ரூபாய் மாயமாகி இருந்தது. பணிப்பெண் மீது சந்தேகம் உள்ளது' என, புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி