உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முல்லைத்தோட்டம் - கரையான்சாவடி மெட்ரோ ரயில் மேம்பால பணி நிறைவு

முல்லைத்தோட்டம் - கரையான்சாவடி மெட்ரோ ரயில் மேம்பால பணி நிறைவு

சென்னை, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி தடத்தில், முல்லைத்தோட்டம் -- கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே, மேம்பாலப்பணி நேற்று நிறைவடைந்து, முக்கியமான மைல் கல்லை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எட்டியுள்ளது. பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு மெட்ரோ ரயில் பாதையில், ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது.அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர்கள் அசோக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கிரேடு செப்பரேட்டர் என்பது, ஒரு சந்திப்பில் வெவ்வேறு உயரங்களில், பல்வேறு வகையான போக்குவரத்தை பிரிக்கும் கட்டிட பணி. போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்ப்பதும் பாதுகாப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கம். பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு அமைக்கப்பட்ட ரயில் பாதையில், கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்துக்கான துவக்க முனையாக நியமிக்கப்பட்ட துாண் எண் 424 பணிகள் முடிவடைந்துள்ளன.போரூர் --- பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தை இவ்வாண்டு இறுதியில் செயல்படுத்தி, மெட்ரோ ரயில் சேவை துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ