நகரும் படிகள் இயங்காததால் மக்கள் அவதி
தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில், ஜி.எஸ்.டி., சாலையை கடப்போரின் வசதிக்காக, நகரும் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், சானடோரியம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் என, ஏராளமானோர் நடைமேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர். நகரும் படிகள், பழுதாவது அடிக்கடி நடக்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியோர் கஷ்டப்பட்டு படிக்கெட்டு ஏறி செல்கின்றனர். ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நகரும் படிகள், இரண்டு நாட்களாக இயங்கவில்லை. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் தலையிட்டு, நகரும் படிகள் அடிக்கடி பழுதாவதை தடுத்து, தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.