மேலும் செய்திகள்
பெண்கள் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் பட்டியல்
20-Feb-2025
சென்னை:சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில், 35 வயது பெண், மென்பொருள் நிறுவனம் ஒன்றில், துாய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவரின், 14 வயது மகள், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்திக், 35 என்ற போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரின் பிடியில் இருந்து மாணவி தப்பித்துள்ளார். சம்பவம் குறித்து மாணவியின் தாய், சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தின் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
20-Feb-2025