உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங் ஏரியாவாக மாறிய பூந்தமல்லி பேருந்து நிலையம்

பார்க்கிங் ஏரியாவாக மாறிய பூந்தமல்லி பேருந்து நிலையம்

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில் அரசு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தின் உள்ளே கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தினமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்தை திருப்ப முடியாமல் ஓட்டுனர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இடநெருக்கடியால் பயணியர் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, பேருந்து நிலையத்தின் உள்ளே தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்துவதை தடை செய்ய, பூந்தமல்லி நகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி