உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் விழுந்த மாடுகள் மீட்பு

கால்வாயில் விழுந்த மாடுகள் மீட்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், பிரித்வி நகரில் உள்ள குப்பை மேட்டில், மூன்று எருமை மாடுகள், நேற்று மேய்ந்து கொண்டிருந்தன.கால்வாய் தெரியாத அளவிற்கு குப்பை கொட்டப்பட்டு இருப்பதால், மாடுகள் மூன்றும் தவறி, 3 அடி ஆழ கால்வாயில் விழுந்தன.மேலே ஏற முடியாமல் தவித்த மாடுகளை மீட்க, பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர்.மாடுகளின் கொம்புகளில் கயிறு கட்டி, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மெதுவாக இழுத்து, மூன்று எருமை மாடுகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி