உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசை மிரட்டிய ரவுடிக்கு 179 நாள் சிறை

பெண் போலீசை மிரட்டிய ரவுடிக்கு 179 நாள் சிறை

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய பெண் காவலர் இந்துமதி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது, விசாரணைக்கு வந்த 'தர்கா' மோகன், 63, என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, அவரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து இந்துமதி அளித்த புகாரின்படி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மோகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது குறித்த வழக்கு, எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், மோகன் மீதான புகார் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், மோகனுக்கு 179 நாள் சிறை தண்டனை மற்றும் 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால், மேலும் 2 மாதம் மற்றும் 2 வாரம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை