மேலும் செய்திகள்
ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்டு ஒப்படைப்பு
04-Feb-2025
ஆவடி,ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 'ஆன்லைன்' மோசடி புகார்கள் மீது, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 10 நபர்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கி பரிவர்த்தனை வாயிலாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அவர்களது வங்கி கணக்கில் இருந்து மீட்கப்பட்ட 76.62 லட்சம் ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் வழங்கினார்.
04-Feb-2025