உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு சீல்

ரூ.26 லட்சம் வரி பாக்கி ஆறு நிறுவனங்களுக்கு சீல்

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, இந்திரா நகர், கஸ்துாரிபாய் நகரில் ஆறு வணிக நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, 26.37 லட்சம் ரூபாய் குடிநீர், கழிவுநீர் வரியை நிலுவை வைத்திருந்தன.பலமுறை 'நோட்டீஸ்' வழங்கியும், அந்நிறுவனம் வரி செலுத்தவில்லை. இதையடுத்து, அடையாறு மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் ஆறு வணிக நிறுவனங்களுக்கும், 'சீல்' வைத்தனர்.அதேபோல், அம்பத்துார் பாடி புதுநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு நிர்வாகம், 43.73 லட்சம் ரூபாய் சொத்து வரியை நிலுவையில் வைத்து உள்ளது.பல முறை 'நோட்டீஸ்' அளித்தும், வரி கட்டாததால் நேற்று, அம்பத்துார் மண்டல அதிகாரிகள், குடியிருப்பு அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி