திருவள்ளுவர்நகர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம் வீட்டுவசதி மேம்பாட்டு கூட்டுறவு சங்க குடியிருப்புகளுக்கு, சாய்ராம் தெருவில் இருந்து திருவள்ளுவர் நகருக்கு சாலை செல்கிறது.மொத்தம் 24 அடி அகலம் உடைய இச்சாலை, ஆக்கிரமிப்பு காரணமாக 19 அடியாக சுருங்கியுள்ளது. இதனால், உள்புற சாலைக்கு, வாகனங்கள் செல்லவதில் சிரமம் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமைப்பை அகற்றி, எளிதான போக்குவரத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் வழிசெய்ய வேண்டும்.- கணேசமூர்த்தி, ஆதம்பாக்கம்