அண்ணா நகரில் அவதி
அண்ணா நகர் மண்டலத்தில், கிழக்கு அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில், போகன்வில்லா பூங்கா பெயரில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, தடம் எண்: '7எச், 7இ, 24ஏ' உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்லும்.இந்நிறுத்தத்தை மறைத்தும், சாலையை ஆக்கிரமிக்கும் வகையிலும், நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், பயணியர் சிரமப்படுகின்றனர். தவிர, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அண்ணா நகர் போலீசாருக்கு பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்பு கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.