உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் பஞ்சராகி மாணவர் பலி

டூ - வீலர் பஞ்சராகி மாணவர் பலி

கூடுவாஞ்சேரி,:நெசப்பாக்கம் சண்முகம் மகன் ஹர்ஷவர்த்தன், 17. அதே பகுதியில் வசிப்பவர் சூர்யா, 17. நண்பர்களான இருவரும், அதே பகுதி தனியார் பள்ளியில் பயில்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 'யமஹா' இருசக்கர வாகனத்தில், வண்டலுார்- - மண்ணிவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்பக்க டயர் திடீரென பஞ்சரானதால் நிலை தடுமாறி, இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும், வழியில் சூர்யா இறந்தார். ஹர்ஷவர்த்தனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெறுகிறார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை