மேலும் செய்திகள்
குறைதீர் முகாமில் 54 மனுக்கள் ஏற்பு
13-Mar-2025
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், எஸ்.எம்., நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில், கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம், நேற்று நடந்தது. வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், போலீஸ் கமிஷனர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து 51 மனுக்கள் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.இம்முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
13-Mar-2025