வானில் சீறி பறந்த மினி விமானம்
சேத்துப்பட்டு: எம்.சி.சி., பள்ளி மாணவர்கள், வடிவமைத்து உருவாக்கிய சிறிய விமானத்தை வானில் பறக்கவிட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். எம்.சி.சி., பள்ளியில், புரொப்பல்லர் டெக்னாலஜிஸ் ரிசர்ச் நிறுவனத்தின் வல்லுநர்கள் வழிகாட்டுதலுடன், 75 மா ணவர்கள் பல குழுக்களாக வடிவமைத்த, ரிமோட்டால் இயங்கும் 'மினி' விமானங்கள், சேத்துப்பட்டு பள்ளி மைதானத்தில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டன . இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, மாணவர்கள் வடிவமைத்த விமானத்தை வானில் பறக்கவிட்டார். மைதானத்தைச் சுற்றி சீறி பறந்த விமானங்கள், அங்கிருந்தோரின் கவனத்தையும் கவர்ந்தது. வி மானம் வானில் பறக்கும்போதும், வெற்றிகரமாக தரையிறங்கியதும், ஆசிரியர்கள், பெற்றோர், அனைவரும் கைதட்டி உற்சாகமடைந்தனர்.