உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜோய் ஆலுக்காஸ் அக் ஷய திருதியைக்கு சலுகை

ஜோய் ஆலுக்காஸ் அக் ஷய திருதியைக்கு சலுகை

சென்னை,அக் ஷய திருதியை முன்னிட்டு, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதன்படி, 75,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.ஒவ்வொரு காரட் வைர நகைக்கும், 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதுதவிர, வைரம் ஒவ்வொரு காரட் வாங்கும் போதும், 500 மி.கிராம் தங்க நாணயம் இலவசம். பிளாட்டினம் நகைகளுக்கு சேதாரத்தில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் இல்லை. இதுகுறித்து, ஜோய் ஆலுக்காஸ் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:இந்த அக் ஷய திருதியை சுப தினத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளின் சேதாரத்தில், 30 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட இணையற்ற பல்வேறு சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது, தங்கத்தில் முதலீடு செய்து, புதிய துவக்கங்களை கொண்டாட சரியா தருணம்.இவ்வாறு அவர் கூறினார். *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை