ஆயுதப்படை எஸ்.ஐ., மீது எழும்பூரில் சரமாரி தாக்கு
சென்னை:எழும்பூரில் மர்ம நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில், ஆயுதப்படை எஸ்.ஐ., படுகாயமடைந்தார்.புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. நேற்று முன்தினம் இரவு, எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை எதிரே உள்ள வணிக வளாகத்தில் 'ஸ்னுாக்கர்' விளையாடி வெளியே வந்தார்.அப்போது, மர்ம நபர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த எஸ்.ஐ., ராஜாராமன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.