உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

முதியவரிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியை சேர்ந்தவர் துரைக்கண்ணு, 70. நேற்று முன்தினம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ ஓட்டி வந்த நபர், கீழே இறங்கி முதியவர் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் பாக்கெட்டில் இருந்து, 1,500 ரூபாயை பறித்து தப்பி சென்றார். செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 36, என தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், மொபைல் போன், பணம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை