உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அண்ணா பல்கலை அலுவலக இ - மெயிலுக்கு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அண்ணா பல்கலை முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எந்தவிதமான வெடிப் பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த நபரின் இணைய முகவரியை வைத்து விசாரித்து வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை