உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை தாக்கிய சிறுவர்கள் கைது

சிறுவனை தாக்கிய சிறுவர்கள் கைது

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுவனை, 24ம் தேதி, 9 பேர் வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், இன்ஸ்டாகிராமில் கிண்டலாக பதிவிட்ட பிரச்னையில் தாக்கியது தெரிந்தது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த மனோஜ், 21, மற்றும் 8 சிறுவர்கள் மீது, வழக்கு பதிவு செய்தனர்.மனோஜ், ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 14, 16 வயதுள்ள இரண்டு சிறுவர்களை, நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி