உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர மின்சார பஸ் மோதி கொத்தனார் பலி

மாநகர மின்சார பஸ் மோதி கொத்தனார் பலி

பூக்கடை: அரசு மின்சார பேருந்து மோதி, சாலையை கடக்க முயன்ற கொத்தனார் பலியானார். ராஜாஜி சாலை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 49. கொத்தனார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, மெரினா, போர் நினைவு சின்னம் அருகில், போக்குவரத்து சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு செல்லும் தடம் எண்: 102 மாநகர மின்சார பேருந்து, ராஜேந்திரன் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பிரசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர பேருந்து ஓட்டுநரான, திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ