உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் செங்கை கலெக்டருக்கு டும் டும் டும்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் செங்கை கலெக்டருக்கு டும் டும் டும்

திருப்போரூர், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன். இவருக்கும் மேகநாதன் - ஜெயந்தி தம்பதியின் மகளான டாக்டர் கவுசிகா என்பவருக்கும், நேற்று காலை 6:30 -- 7:30 மணிக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள உற்சவ மண்டபத்தில், எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குடும்பத்தார், துறை சார்ந்த அலுவலர்கள், அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். நேற்று, கலெக்டர் திருமணம் தவிர, 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி