உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா ரூ.15 கோடியில் பணிகள் நிறைவு

கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் காலநிலை பூங்கா அமைக்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.இந்த பூங்கா அமைக்கும் பணிகளை, கலெக்டர் அருண்ராஜ், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டு வரும் புதிய காலநிலை பூங்கா, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியர் இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்காவில், பூச்செடிகள், அழகிய நடைபாதை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், 15.20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளன.பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 10 சதவீத பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிந்து, முதல்வர் விரைவில் திறந்து வைப்பார்.கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது குறித்து, மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !