உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அ.ம.மு.க., நிர்வாகிக்கு வெட்டு

 அ.ம.மு.க., நிர்வாகிக்கு வெட்டு

பல்லாவரம்: பொழிச்சலுார், விநாயகா நகரைச் சேர்ந்தவர் முருகன், 48; அ.ம.மு.க., நிர்வாகி. இவர், இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடைக்கு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தலைமையிலான, ஐந்து பேர் கும்பல், முருகனை சரமாரியாக வெட்டி தப்பினர். போலீசார் முருகனை மீட்டு விசாரித்தனர். இதில், முத்துக்குமார், முருகன் ஆகிய இருவரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முன்விரோதம் காரணமாக முருகனை அரிவாளால் வெட்டியதும் தெரிந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி