மாற்றுத்திறனாளிகள் மனு தரும் போாட்டம்
திருவொற்றியூர்: மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கான கார்டுகளாக மாற்றக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராடி வருகின்றனர். திருவொற்றியூரில் உள்ள, உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று, சங்கத்தின் மாவட்ட செயலர் ராணி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.