உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் இடையூறு

அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் இடையூறு

அண்ணா நகர், அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், டவர் பூங்கா நுழைவாயில், அண்ணா ரவுண்டா, கந்தசாமி கல்லுாரி, அண்ணா நகர் காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. இச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் செயல்படுகின்றன. இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த பகுதியில், போக்குவரத்து முறையாக ஒழுங்குப்படுத்துவது கிடையாது. இதனால், சாலையில் அடாவடியாக ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மூன்றாவது அவென்யூ பேருந்து நிறுத்தம் முன் பயணியர் நிழற்குடையை மறைத்து, வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது நடைமுறை ரத்து செய்யப்பட்டதால், வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.போக்குவரத்து காவல் அதிகாரிகள் இதை கண்காணித்து ஆக்கிரமிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ