சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது
கோயம்பேடு, கோயம்பேடு காவல் மாவட்டத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கோயம்பேடு பகுதியை சேர்ந்த கருமலைசாமி, 69 என்பவர், சிறுமியிடம் சில்மிஷம் செய்து உள்ளார்.இதைப்பார்த்து, அங்கிருந்தவர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். கருமலைசாமியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.இவர் ஏற்கனவே போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறை சென்று திரும்பியவர் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.