உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஞாயிறு அட்டவணைப்படி 31ல் மின்சார ரயில் இயக்கம்

ஞாயிறு அட்டவணைப்படி 31ல் மின்சார ரயில் இயக்கம்

சென்னை:சென்னை, புறநகர் பகுதிகளில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும்.அந்த வகையில், ரம்ஜான் பண்டிகையான வரும் 31ம் தேதி, தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என, அனைத்து மின்சார ரயில் தடங்களிலும், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.அதேபோல், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும், வரும் 31ம் தேதி ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கும்.அதாவது, காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே இயங்கும் என, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ