போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது
மண்ணடி, எஸ்பிளனேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு, மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவர்களை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தில், அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, 'மெத்ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ் பிரதாப், 23, தண்டையார்பேட்டை சந்தோஷ், 18, புழல் பிரவீன், 20, பழைய வண்ணாரப்பேட்டை தேஜஷ், 18, மணலி பாத்திமா மவுபியா, 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்பிலான, 7 கிராம் எடை, 'மெத் ஆம்பெட்டமைன், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், நேற்று, ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.