உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவர்களை தாக்கி போன் பறிப்பு சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

சிறுவர்களை தாக்கி போன் பறிப்பு சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

கொடுங்கையூர், சிறுவர்களை தாக்கி மொபைல் போன் பறித்த, வியாசர்பாடி சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அபிேஷக், 17, விஜயகுமார், 17. இவர்கள் நேற்று, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் இருக்கும் தன் நண்பரை பார்க்க சென்றனர். அப்போது, எழில் நகர் ரயில்வே டிராக்கில் அமர்ந்திருந்த ஆறு பேர் கும்பல், சிறுவர்களை சரமாரியாக தாக்கி, இரு மொபைல்போன்களை பறித்து தப்பினர். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த வாசுதேவன், 23, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 21, சஞ்சய், 19, மற்றும் 16 வயது சிறுவன் உட்பட, நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !