கோவில் அருகே குப்பை பக்தர்கள் முகம் சுளிப்பு
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையோரம், காட்டுப்பாக்கத்தில் தவமுனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை, இந்த கோவில் பின்புறம் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.காட்டுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர், இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். - -ஆர்.நாகராணி, பூந்தமல்லி.