ஏரிகரையில் கொட்டிய குப்பை சாலையில் பரவி சீர்கேடு
நன்மங்கலம் ஏரி சாலை ஓரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையில் கிடக்கும் உணவுக்காக கால்நடைகள், நாய்கள் அங்கு அதிகளவில் வருகின்றன. அவை குப்பையை இழுத்து போடுவதால், சாலை வரை பரவியுள்ளன. சாலை வரை பரவியுள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.-- -மா.சீனிவாசன், நன்மங்கலம்.