குறைதீர் முகாம்: 22 மனுக்கள் ஏற்பு
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில், 22 மனுக்களை கமிஷனர் அருண் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த குறைதீர் முகாம் நடப்பதற்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். துணை கமிஷனர் சுப்புலட்சுமி உடனிருந்தார்.