உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.25க்கு பச்சை பட்டாணி

வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.25க்கு பச்சை பட்டாணி

சென்னை:வரத்து அதிகரிப்பால், பச்சை பட்டாணி கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பச்சை பட்டாணி சாகுபடி நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவற்றின் சாகுபடி நடக்கிறது.தமிழகம் மற்றும் கர்நாடகாவில், பச்சை பட்டாணி அறுவடை அதிகரித்துள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினம் 20க்கும் மேற்பட்ட லாரிகளில், அவற்றின் வரத்து உள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக, பச்சை பட்டாணி விலையும் சரிந்துள்ளது.கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை பட்டாணி, தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ