உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்

சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்

சென்னை, சரக்கு ரயில் தீ விபத்து குறித்து, 16 பேரிடம், விசாரணையை துவக்கியது.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, டீசல் ஏற்றிய 50 டேங்கர்களுடன் சென்ற சரக்கு ரயிலில், கடந்த 13ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு, 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின.இதையடுத்து, சென்ட்ரல்-- அரக்கோணம் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று காலை முதல், மின்சார, விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.தீ விபத்து குறித்து விசாரிக்க, ஒருங்கிணைப்பாளர் நிதின் நோர்பர்ட் உட்பட நான்கு பேர் குழுவை, தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.விபத்து குறித்து விசாரிக்க, சரக்கு ரயில் ஓட்டுநர் முதல் பாய்ன்ட் மேன் வரையிலான, 16 பேருக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.சென்னை ரயில்வே கோட்டத்தில், பாதுகாப்பு துறை அலுவலகத்தில், அவர்களிடம் நேற்று விசாரணை துவங்கியது. இந்த விசாரணை, இரண்டு நாட்கள் நடக்கும். அப்போது, தீ விபத்துக்கான காரணம், விபத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளம், சிக்னல் ஆகியவற்றின் நிலை குறித்து, ரயில் ஓட்டுநர், நிலைய அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !