ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு
சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்படும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின், தென்சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த உள்ளது.இக்குழுவில் உறுப்பினர்கள் பிரதிநிதியாக பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விபரங்களுக்கு, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது 044 - 2471 4758 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.