உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கர்நாடக பஸ்

சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கர்நாடக பஸ்

பூந்தமல்லி: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கர்நாடக மாநில அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி பகுதியை, நேற்று காலை 5:45 மணிக்கு பேருந்து கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி, சாலையில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி சேதமானது. ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த ஒன்பது பயணியர், லேசான காயம் அடைந்தனர். அவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !